Worldcup : உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணியை விட இவர்களுக்கே வாய்ப்பு அதிகம் – கம்பீர்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Gambhir
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

indiateam

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலக கோப்பையை கைப்பற்றும் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலமாக இருந்தாலும் இந்தத் தொடரை கைப்பற்றும் முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணி தற்போது விளங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

australia

மேலும் எப்போதும் பலமாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரிலும் பலமாகவே இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடைபெறுவதால் நான் இங்கிலாந்திற்கு கோப்பை கிடைக்கும் என்று கூறவில்லை. இங்கிலாந்து அணியின் வீரர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக ஆடி வருகின்றனர். எனவே இந்த உலக கோப்பை தொடரில் நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணிக்கு கோப்பை உறுதி என்று கம்பீர் கூறினார்.

Advertisement