Worldcup : உலகக்கோப்பை தொடரில் இவரே 4 ஆவது வீரராக களமிறங்க வேண்டும் – கம்பீர்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Gambhir
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணியின் 4ஆவது வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதுகுறித்து கம்பீர் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது 4 ஆவது களமிறங்க ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பதிலாக தற்போது ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக ஆடிவரும் ராகுலுக்கு வாய்ப்பளிக்கலாம்.

Rahul

ராகுல் எந்த இடத்திலும் களமிறங்கி நன்றாக விளையாடும் திறமை கொண்டவர். ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரால் சிறப்பாக விளையாட முடியும். விஜய் ஷங்கர் தற்போதே சர்வதேச கிரிக்கெட் விளையாட துவங்கி இருக்கிறார். ஆனால், ராகுல் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி அனுபவம் உடையவர் எனவே அவருக்கே 4 ஆவது வீரராக களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கம்பீர் கூறினார்.

Advertisement