தோனி இல்லை என்றால் இவர்கள் அனைவரது வாழ்க்கையும் முடிந்திருக்கும் – கம்பீர் உருக்கம்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக 15 வருடங்கள் இருந்த தோனி தனது காலகட்டத்தில் பல இளம் வீரர்களை ஊக்குவித்து உருவாக்கி, எதிர்கால திட்டமிடலுடன் வழி நடத்தியுள்ளார். தனக்கு எப்படி கங்குலி உதவினாரோ அதுபோலவே தற்போது இந்திய அணியில் உள்ள பல வீரர்களுக்கு உதவி தற்போது அவர்கள் நட்சத்திர வீரர்களாக இருக்கின்றனர்.

dhoni

- Advertisement -

இது குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். பொதுவாக தோனியை எப்போதும் தூற்றிக்கொண்டே இருக்கும் கம்பிர் தற்போது புகழ்ந்து பேசியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலி மோசமாக விளையாடினார் அப்போது அவருக்கு பக்கபலமாக தோனிதான் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் கௌதம் கம்பீர்.

இதுகுறித்து அவர் கூறுகையில்… 2014 ஆம் ஆண்டு இங்கலாந்தில் விராட் கோலியின் மோசமான சுற்று பயணமாக இருந்தது. அந்த அணியில் நானும் இருந்தேன். ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினேன். அந்த சுற்றுப்பயணத்தின் பலரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து இருக்கும். ஆனால் வீரர்கள் அனைவரும் தோனி என்ற ஆளுமையின் கீழ் பாதுகாப்பில் இருந்தனர்.

dhoni

குறிப்பாக விராட் கோலிக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அடுத்தமுறை விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அடித்து நொறுக்கினார். அதுவும் பிரிம்மிங்காம் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம் தற்போது வரை என்னால் மறக்க முடியாத அளவில் இருக்கிறது. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட்.

Kohli-1

அதன் பின்னர்தான் விராட் கோலி தற்போது இருக்கும் சூப்பர் ஸ்டார் போல் மாறினார். 2014ம் ஆண்டு 10 ஆட்டத்தில் சேர்த்து 134 ரன்களை மட்டுமே எடுத்த விராட் கோலி 2017 ஆம் ஆண்டு 8 ஆட்டத்தில் 697 ரன்களை குவித்தார். இதற்கு எல்லாம் காரணம் தோனிதான் தோனி மட்டும் அன்று விராட் கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால் தற்போதைய சூப்பர் ஸ்டார் கோலி இல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.

Advertisement