என்ன ஆச்சு கம்பீருக்கு ? மீண்டும் சர்ச்சையான கருத்தை கூறி வம்பிழுப்பு – ரசிகர்கள் கொதிப்பு

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கௌதம் கம்பீர் அவ்வப்போது தன் மனதில் தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக கூறும் வழக்கத்தை உடையவர். அப்படி அவர் வெளிப்படையாக கூறும் கருத்துக்கள் பலமுறை ரசிகர்களிடம் பெரும் கண்டனத்தையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளன. ஏனெனில் ஏற்கனவே பலமுறை தோனியின் மீதுள்ள அதிருப்தி காரணமாக எப்போதுமே அவருக்கு எதிர்மறையாகவே தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Gambhir

- Advertisement -

அதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியும் உள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை தன்னுடைய கருத்தினை பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். அதன்படி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.

அதன்படி அவர் பதிவிட்ட கருத்து தற்போது மீண்டும் ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் தொடரில் பெற்ற இந்த வெற்றியை “இந்திய கிரிக்கெட் அணி 1983, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் பெற்ற உலக கோப்பையை விட பெரியது என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த கருத்திற்கு தற்போது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன ? அவரின் இந்த கருத்து சரிதானா ? இதுகுறித்த உங்களது கருத்துக்களை பதிவிடலாம் நண்பர்களே..

Advertisement