எங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..!ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..!

gambhir dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தோனி மீதான விமர்சனங்கள் வலுத்து வருகின்றது. அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த கம்பீர் தோனியை கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவின் முன்வரிசை ஆட்டக்காரராக பல ஆண்டுகள் விளையாடி, நெருக்கடியான நேரங்களில் இந்தியாவின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் கவுதம் கம்பிர். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கம்பீர் தோனி குறித்து கூறியதாவது.

- Advertisement -

015-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைகாக அந்த முடிவை எடுத்ததாக தோனி தெரிவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், வயது ஒரு விஷயமே இல்லை. தொடர்ந்து ரன் எடுக்கும் திறன் இருந்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்.ஆனால், அன்று எங்கள் மூவராலும் இணைந்து விளையாடமுடியவில்லை. அப்படிருக்கு ஒரு இக்கட்டான நிலையில் எங்கள் மூவரையும் ஒன்றாகக் களமிறக்கினார் தோனி.

அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய ஒரு போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நான் மூன்றாவது வீரராகவும் களமிறக்கப்பட்டேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றோம். தொடரின் தொடக்கத்தில் எங்களை இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஒரு இக்கட்டான நேரத்தில் மூவரையும் களமிறக்கினார்.என்று தோனியை சாடியுள்ளார் கம்பீர்.

Advertisement