World Cup : உலகக்கோப்பை இந்திய அணியுடன் இந்த 4 வீரர்களும் இங்கிலாந்து செல்கின்றனர் – காரணம் இதுதான்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Team
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

net

இந்நிலையில் இந்திய அணியுடன் மேலும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து செய்கின்றனர். நவ்தீப் சைனி, கலீல் அஹமது, தீபக் சாகர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் உலகக்கோப்பை இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்கின்றனர். இவர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு வலைப்பயிற்சிகளில் பந்துவீச உள்ளார்கள்.

net 1

இங்கிலாந்து போன்ற மைதானங்களில் பந்து வேகம் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் இவர்களை வலைப்பயிற்சியில் பந்துவீச வைத்து இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது இந்திய அணியின் நிர்வாகம். மேலும், தொடரின் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரராக இந்த நால்வரில் இருந்து ஒருவர் அணியில் விளையாடுவார்கள் என்று பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement