இங்கிலாந்தை பிளான் பண்ணிதான் வச்சி செஞ்சேன்..! குல்தீப் யாதவ் அதிரடி..!

kuldeep1
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, , 5 டெஸ்ட் போட்டிகளில் ,3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது, இதில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நேற்று (ஜூன் 3) மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ராய் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இவர்கள் இருவரில் முதலில் ராய்யின் விக்கெட்டை கைப்பற்றி பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் உமேஷ் யாதவ். பின்னர் ஜோஸ் பட்லர் மட்டும் நிலைத்து ஆட அடுத்து வந்த வீரர்களை கதிகலங்க வைத்தார் குல்தீப் யாதவ்.

முதலில் ஹேல்சிடம் இருந்து தனது கணக்கை தொடங்கிய குல்தீப் யாதவ், பின்னர் வரிசையாக இயான் மோர்கன், ஜோன்னி பிரிஸ்டோ, ஜோ ரூட் , ஜோஸ் பட்லர் போன்றவர்களின் விக்கெட்டுகளை கை பற்றினார். இந்த போட்டியில் 4 ஒவர்களை வீசிய குல்தீப் யாதவ் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

- Advertisement -
Advertisement