3ஆவது டி20 போட்டி : இந்திய அணிக்கு எதிராக நாங்க போட்ட இந்த பிளான் தான் வெற்றிக்கு காரணம் – மோர்கன் மகிழ்ச்சி

Morgan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

INDvsENG

- Advertisement -

அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் பர்ட்னர் 83 ரன்களும், பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியின் முதல் பாதியில் எங்களது பவுலிங் சிறப்பாக இருந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசினர்.

Wood

மேலும் போட்டிக்கு முன்னர் நாங்கள் என்ன திட்டத்தை வைத்து இருந்தோமோ அதே திட்டத்தின்படி துவக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தியது எங்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய வீரர்களை துவக்கத்திலேயே வீழ்த்தியதால் ஆட்டத்தில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. மேலும் இந்த மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும். ஏனெனில் இந்த மைதானம் அப்படி பட்டது மேலும் டி20 என்பது அந்த வகையான விளையாட்டுதான்.

Buttler 1

இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி எங்களது அணியின் தரத்தை நிரூபித்துள்ளோம். ஜாஸ் பட்லர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரை நாங்கள் அணியில் வைத்திருப்பது எங்களுக்கு மிகவும் லக்கி என்று நான் நினைக்கிறேன். துவக்க வீரராக இறங்கி விளையாடும் அதிரடியான ஆட்டம் அவர் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்கிறது. 100வது போட்டியில் நான் விளையாடியதை நினைக்கையில் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது என்றும் இயான் மோர்கன் குறிப்பிடத்தக்கது.

Advertisement