இந்தியாவை பழிதீர்த்த இங்கிலாந்து..! ஜோ ரூட் பதிலடி..! விராட் கோலி வேதனை..!

virat
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் நேற்று முன்தினம் நடத்த முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
kholi
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, ஷிகர் தவான் 36 ரன்களிலும், கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
raina
அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 46 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டும் எடுத்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் லியாம் ப்ளன்கெட் 4 விக்கெட் எடுத்தார்.ண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

- Advertisement -
Advertisement