கே.எல் ராகுலின் மீது பியர் பாட்டில் மூடிகளை வீசிய ரசிகர்கள் – கோலி கொடுத்த பதிலடி என்ன தெரியுமா ?

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் ரோஹித் 84 ரன்களும், ராகுல் 129 ரன்கள் குவித்தனர்.

Rahul-1

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது நாள் போட்டியின்போது ராகுல் மீது இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் பியர் பாட்டில் மூடிகளை தூக்கி அடித்தது போட்டியின்போது சர்ச்சையை கிளப்பியது. பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் பியர் பாட்டில் மூடிகளை தூக்கி வீசியதால் அது குறித்து இந்திய வீரர்கள் அனைவரும் அம்பயரிடம் புகார் அளித்தனர்.

இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது. இருப்பினும் மீண்டும் சில நிமிடங்களில் போட்டி துவங்கியது. இந்நிலையில் ராகுல் மீது பாட்டில் மூடிகளை தூக்கிவீசப் படும்போது அதனை கண்ட விராட் கோலி மீண்டும் அதனை தூக்கி பெவிலியன் நோக்கி வீச சொன்னார்.

rahul 1

இதற்கு காரணம் ரசிகர்களின் மீது கடுமையான கோபத்தில் இருந்த கோலி இங்கிலாந்தின் ரசிகர்களின் செயல் அருவருக்கத்தக்க செயலுக்காக மீண்டும் அவர்களின் மீதே திரும்ப அடிக்கும் படியும், மைதான நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மீண்டும் மூடிகளை பெவிலியனை நோக்கி வீச சொன்னார்.

இருப்பினும் ராகுல் அமைதியாக அந்த விஷயத்தை எடுத்து தொடர்ச்சியாக பீல்டிங்கில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement