உலகை கிரிக்கெட்டை திரும்பி பார்க்கவைத்த சேலத்து மைந்தனுக்கு வாழ்த்துக்கள் – முதலமைச்சர் பகிர்ந்த வாழ்த்து

nattu-2
- Advertisement -

நவம்பர் 10ஆம் தேதி இந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் முடிவடைகிறது. பல சிக்கல்களுக்கு இடையே சிறப்பாக நடைபெற்று முடிய இருக்கும் இந்த தொடருக்கு பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக மூன்று வகையான இந்திய அணியும் ஏற்கனவே பி.சி.சி.ஐ யால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

INDvsAUS

- Advertisement -

அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா பயணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரானது நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தொடராக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியும் தற்போது துபாயில் முகாமிட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இந்த ஐபிஎல் தொடரில் கலங்கிய தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான சக்கரவர்த்தி இடம் பிடித்திருந்தார்.

Nattu-2

ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இருந்த நடராஜன் தற்போது டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் தேர்வானதற்காக நடராஜனுக்கு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் : கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தனது அசாத்தியமான பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தன் திரு. நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. அவர் சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். என தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement