சிறிய அணிகளையும் கங்குலி கணக்கில் கொள்ள வேண்டும் – டூபிளிஸ்சிஸ் வேண்டுகோள்

Faf
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பதவி ஏற்ற பின் பல அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி வருகிறார். அதன் முதல் படியாக இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தி அனைவரையும் அசர வைத்தார் கங்குலி அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் குறித்த பல்வேறு ஆக்கபூர்வ அம்சங்களை செய்லபடுத்த ஆலோசனையும் செய்து வருகிறார்.

Ganguly-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலும் அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளார் கங்குலி. அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் அணிகளாக இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னொரு அணியும் சேர்த்து நான்கு நாடுகள் கொண்ட சூப்பர் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இடம் கங்குலி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்படி இந்த பேச்சுவார்த்தை சரியாக அமையும் பட்சத்திலும், ஐ.சி.சி இதற்கு அனுமதிக்கும் பட்சத்திலும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சூப்பர் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் தொடர் நடைபெறும் என்றும் இந்த திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

Ganguly

இந்நிலையில் கங்குலியின் இந்த ஐடியா குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளிஸ்சிஸ் கூறியதாவது : மூன்று அணிகள் என்று சொல்லப்படும் அந்த டாப் மூன்று அணிகள் தான் அதிகமான போட்டிகளில் ஆடுகின்றன. அந்த அணிகளுக்கு இடையே தான் அதிகமாக மோதிக் கொள்கின்றன. இன்னும் அதிகமான அணிகளை இணைத்து ஆடினால் கிரிக்கெட் இன்னும் மேம்படும். சிறிய அணிகள் மிகக்குறைவான போட்டிகளில் தான் ஆடுகின்றன எனவே இதனை இதனையும் கருத்தில் கொண்டு சூப்பர் சீரியஸ் குறித்து முடிவு செய்யலாம் என்று கங்குலியின் யோசனைக்கு டூபிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement