டிரா ஆகும் என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த இருவர் எங்களை தோற்கடித்துவிட்டனர் – டூபிளிஸ்சிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Faf 1

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி என அனைவரும் கலக்கினார்கள். ஷமி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டூபிளிஸ்சிஸ் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். இருப்பினும் இந்திய அணியின் வீரரான ரோகித் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினார்கள். முதல் இன்னிங்ஸில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம் இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் ரோஹித் மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை எங்கள் கைகளில் இருந்து கொண்டு சென்று விட்டனர்.

கடைசி நாளான இன்று எங்களது வீரர்கள் இந்த மைதானத்தில் பேட்டிங் சிறப்பாக செய்ய முடியவில்லை. ஏனெனில் மைதானம் பந்துவீச்சுக்கு அதிக அளவு ஒத்துழைத்தது. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது சாதாரணமான விடயம் தான். எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்த போட்டியில் இந்த தவறை நாங்கள் சரிசெய்வோம் ரோகித் மற்றும் புஜாராவே எங்களை வீழ்த்தினார்கள் என்று நான் கூறுவேன் என்று டூபிளிஸ்சிஸ் கூறினார்.

Advertisement