Worldcup : இந்திய அணி இங்கிலாந்தில் இந்த இலக்கினை எதிர்த்தே ஆட அதிக வாய்ப்பு உள்ளது – டிராவிட் கணிப்பு

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Rahul
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்து ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது : உலககோப்பை போட்டிக்கான இந்திய அணி சமமான அணியாகவே நான் கருதுகிறேன். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 30 மாதங்களாக பல ஒருநாள் தொடர்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கைப்பற்றியது. இதனால் இந்த உலககோப்பையினை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது.

- Advertisement -

teamindia

அதேபோன்று இங்கிலாந்தில் 1999 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போன்று குறைந்த ரன்களில் போட்டி முடியாது. தற்போது உள்ள இங்கிலாந்து மைதானங்களில் முதலில் விளையாடும் அணி 300 ரன்கள் வரை எளிதாக குவிக்கும். ஆகவே இந்த முறை உலகக்கோப்பை தொடரில் 300 ரன்கள் மற்றும் அதற்கு மேல் இலக்கு இருக்கும் என்பதனை நினைவில் கொண்டு இந்திய அணி விளையாட வேண்டும் இதனை நான் இங்கிலாந்து மைதானங்களை முறைப்படி கணித்து கூறுகிறேன் என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் தற்போது இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணி ஆகியவற்றிற்கு பயிற்சியாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement