விராட் கோலி தலைமையிலான அணி இதனை நிச்சயம் சாதிக்கும் – டிராவிட் பேட்டி

dravid
- Advertisement -

இந்தியா கடைசியாக பங்கேற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற கணக்கில் பரிதாபமாக ஒருநாள் தொடரை இழந்தது, இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து அதிர்ச்சியை அளித்தது.

indianteam

- Advertisement -

உலகக்கோப்பை அருகில் வரும் இந்த சமயத்தில் இந்திய அணியின் இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர் உலககோப்பை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே கோப்பையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் இந்தியா அணியின் முன்னாள் வீரரான டிராவிட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், டிராவிட் கூறியதாவது : இந்திய அணியின் சமீபத்திய ஆட்டங்கள் சிறப்பாகவே உள்ளது. மேலும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சில ஆண்டுகளில் பல சாதனைகளை இந்திய மண்ணிலும், வெளிநாடுகளிலும் செய்து வருகிறது. எப்போதும் வெற்றியை நோக்கி போராடும் குணம் உடையவர் கோலி.

india

அவரது தலைமையில் இந்திய அணி நிச்சயம் 50 ஓவர் உலககோப்பையினை கைப்பற்றும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. இங்கிலாந்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலை தந்தாலும் இந்திய அணி அனைத்து அணிகளையும் வென்று இறுதி போட்டியில் வென்று உலககோப்பையினை இந்திய வெல்லும் என்று கூறினார்.

Advertisement