அவர் ஏன் இந்திய அணியில் விளையாடல, என் கேரியர் மாதிரி அவரையும் முடிச்சுராதீங்க – இளம் வீரருக்கு முரளி விஜய் ஆதரவு

murali
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக மிக சிறப்பாக விளையாடினால் ரசிகர்களால் ஹீரோவாக கொண்டாடப்படுவதற்கு நிகராக இந்திய அணியில் இடத்தை பிடிப்பதும் அதை தக்க வைத்துக் கொள்வதும் மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக இப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரர்களுக்கு கூட அடுத்த போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்தளவுக்கு போட்டி மிகுந்த இந்திய அணியில் தங்களது இடத்தைப் பிடிக்கப் போராடும் பல வீரர்களுக்கு மத்தியில் டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெர் வீரர் பிரிதிவி ஷா ஒருவராக இருந்து வருகிறார்.

shaw 1

- Advertisement -

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் முன்னாள் வீரர் சேவாக் போல அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த அசத்திய அவரை சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, விரேந்திர சேவாக் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். ஆனால் அந்த பாராட்டையும் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு நாளடைவில் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறிய அவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

கேரியரை முடிச்சுராதீங்க:
இருப்பினும் கடைசியாக கடந்த 2021 ஜூலை மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்த அவர் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் தேர்வுக்குழுவினர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடந்த ரஞ்சிக் கோப்பையில் முச்சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பிய அவர் உடல் எடையையும் குறைத்துள்ளதால் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் தேர்வானார். ஆனாலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் சேர்க்கப்படவில்லை.

Hardik Pandya Prithvi Shaw

அதனால் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் அவர் தற்போது நல்ல பார்மில் இருந்தும் ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். முன்னதாக 2010 – 2015 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் வீரேந்திர சேவாக்கிற்கு கிடைத்த வாய்ப்புகள் தமக்கு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் முரளி விஜய் பிசிசிஐ மீது குற்றம் சாட்டியிருந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படும் சுப்மன் கில் போல் வர வேண்டிய பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் என்ற வகையில் சமீபத்திய பேட்டியில் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக 15 சூப்பர் ஸ்டார் வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறீர்கள் என்றால் என்னை பொறுத்த வரை நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்”

Murali-Vijay

 

- Advertisement -

“ஆனால் நுணுக்கங்கள் அடிப்படையில் சுப்மன் கில் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோரை நான் மிகவும் விரும்புகிறேன். அதே போல் ரிஷப் பண்ட் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டுகாக சிறந்த வேலையை செய்துள்ளார். அவர் விரைவில் குணமடைய நான் வாழ்த்துகிறேன். ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் பிரிதிவி ஷா ஏன் தற்போது இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி நீங்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC ஃபைனல் : கோப்பை வெல்ல அஷ்வின் – ஜடேஜா ஜோடியில் ஒருவருக்கே இடம், அக்சருக்கு பதில் அவர் வேணும் – டிகே அதிரடி

முன்னதாக ஏற்கனவே வாய்ப்பு பெறாமல் இருந்து வரும் பிரித்திவி ஷா சமீபத்தில் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது சர்ச்சை ஏற்படுத்தியதால் நன்னடத்தையின்மை காரணமாக மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement