- Advertisement -
ஐ.பி.எல்

ராஜஸ்தான் அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதி. சிக்கலில் நிர்வாகம் – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் 21ம் தேதி துபாய் புறப்பட இருக்கிறது. புறப்படுவதற்கு முன் அனைத்து அணியை சேர்ந்த வீரர்களுக்கும், உதவியாளர்களுக்கும், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இரண்டு முறை நடைபெற உள்ளது.

இந்த இரண்டு பரிசோதனைகளின் முடிவில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியான பிறகு தான் வீரர்கள் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதனை தனது ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ள அவர் கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பிசிசிஐயின் வழிகாட்டு நெறி முறைப்படி 14 நாட்கள் நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைய எனக்கு இன்னும் இரண்டு நெகட்டிவ் முடிவு தேவை என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜஸ்தான் அணி துவக்க போட்டிகளில் இவரை இழக்க நேரிடும். மேலும் இரண்டு முறை நெகட்டிவ் வந்தால் மட்டுமே இவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அணி வீரர்களுடன் இணைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்பே கொரோனா உறுதியாகியுள்ளதால் பெரும் சிக்கல் தீர்ந்துள்ளது. ஒருவேளை அவர் வீரர்களுடன் பயணித்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தால் அது ராஜஸ்தான் அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by