அடுத்த 6 மாசத்துக்கு தோனியால் கிரிக்கெட் விளையாடவே முடியாதாம். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சாக்ஷி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கிறார் மேலும்., ஐபிஎல் தொடரும் இல்லாததால் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்வதில்லை. இந்நிலையில் அவரது மனைவி சாக்ஷி நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நேரலையில் பேட்டி கொடுத்தார்.

- Advertisement -

அப்போது பல கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார் தோனியின் ஓய்வு பற்றி சமீபத்தில் வந்த வதந்திகள் பற்றியும் பேசினார். இது வெறும் வதந்தி தான் லாக்டவுன் காலத்தில் உங்களது மனநிலை பிரண்டு விட்டது என்பது போன்றும் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் தோனி சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டில் என்ன செய்கிறார் என்பது பற்றியும் பேசியுள்ளார் சாக்ஷி சிங்.

அதில் அவர் கூறியதாவது : தோனி இந்த லாக் டவுன் காலத்தில் சுமார் 7 பைக்குகளை வடிவமைத்தார். அந்த ஏழு பைக்குகளும் பழைய மாடல் பைக்குகள் ஆகும். அதற்கான உதிரிபாகங்களை கடையிலிருந்து வாங்கி வந்து ஒரு முழு பைக்கை தயார் செய்தார் . ஆனால் ஒரு சில பாகங்களை சரியாக பொருத்த தவறிவிட்டார்.

இதன் காரணமாக அந்த பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. உடனடியாக அனைத்தையும் பிரித்து போட்டுவிட்டார். அவர் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அதிகமாக கேம் விளையாடுகிறார். இது அவரது மனதை திசை திருப்புகிறது. குறிப்பாக எப்போதும் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் கூட பப்ஜி குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் சாக்ஷி டோனி.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே குறித்து பேசிய சாக்ஷி தோனி : நாங்கள் சிஎஸ்கேவை மிகவும் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடக்குமா ? நடக்காதா ? என்பது தெரியவில்லை. எனது மகளும் சிஎஸ்கே குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறாள். இருப்பினும் இந்த வருடம் என்ன நடந்தாலும் கிரிக்கெட் இல்லை. காரணம் நாங்கள் முன்னதாகவே வரும் நாட்களை எங்கே செலவு செய்யப்போகிறோம் என்பது குறித்து திட்டமிட்டு விட்டோம்.

sakshi

கிரிக்கெட் இருந்தால் இருக்கும் ஆனால் தோனி இனி வரும் நாட்களில் மலை ஏற்றத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார். நாங்கள் உத்தரகாண்ட் செல்ல இருக்கிறோம் அங்கு உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்குவதற்கான திட்டமும் தயார் செய்து விட்டோம். இது மட்டுமின்றி சாலை பயணங்களை மேற்கொள்ளும் திட்டமிட்டமும் இருக்கிறது. இந்த ஊரடங்கு நாட்களில் தோனி மன அழுத்தத்தை போக்கி வருகிறார் அதனை தொடர்ந்து அடுத்த ஆறு மாதத்திற்கு இதுவே எங்களது திட்டம் என்று சாக்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement