இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் துவக்கத்தில் தானாக ஓய்வினை கேட்ட அவருக்கு தொடர்ந்து இந்திய
அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிசிசிஐயின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற தோனியின் கனவும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி போய் உள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
Stay still, dear heart!😍😇 https://t.co/2IWMPQYZUZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) July 17, 2020
மேலும் கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தோனி எவ்வாறு இருக்கிறார் என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அவ்வப்போது தோனியின் மனைவி சாக்ஷி வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மூலமே தோனியை ரசிகர்கள் கண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்காக தோனி 15 வினாடி இருக்கும் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருவது குறிப்பிடத்தக்கது.