இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்ட தற்போது சம்பளப் பட்டியலில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
“Start of organic farming of watermelon in Ranchi followed by papaya in 20 days time, first time so very excited.”
– MS Dhoni (@msdhoni) #Dhoni #MahiWay #Ranchi #MSD pic.twitter.com/oCQ0uLw4mM
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 26, 2020
மேலும் இந்த வருடத்தில் மீண்டும் அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி செய்யும் ஒவ்வொரு செயலும் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இயற்கை முறையில் தர்பூசணி பழத்தை பயிரிடுவது போன்ற வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் விவசாயிகள் செய்வது போல ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து தோனி வணங்குகிறார். மேலும் இந்த விவசாயத்தை முதல் முறை அமைத்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தோனி 20 நாட்களுக்கு முன்பு பப்பாளி நடவு செய்யப்பட்டதாகவும் முதல் முறை விவசாயத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.