இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி கடந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருக்கிறார்.
Wishing all brothers and sisters a very Happy Bhaidhooj ????????
Here's a throwback picture of Mahi with his siblings!#MSDhoni #Dhoni #Bhaidhooj pic.twitter.com/u9kza8xasd
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 29, 2019
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான தோனி இதுவரை 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்த 15 ஆண்டுகளில் அவருடைய சொத்து மதிப்பு பல கோடியை தொட்டுள்ளது. ஆனால் அவரின் ஆரம்ப கால வாழ்க்கையை மிகவும் சாதாரணமான ஒன்றாகவே இருந்துள்ளது.
இன்று தனியாக பண்ணை வீடு வைத்திருக்கும் தோனி அவர் அறிமுகமான சில ஆண்டுகள் வரை ஒரு சிறிய வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். அவரது உறவினர்களுடன் தோனி 2005 ஆம் ஆண்டு தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படத்தை தோனி ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்தும் வருகின்றனர்.