தோனிக்கு இருந்த கடைசி வாய்ப்பும் போச்சு. கங்குலியின் கருத்தால் ஏற்பட்ட சோகம் – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் 18 மற்றும் 21ம் தேதிகளில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளில் நடத்துகிறது.இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி பெற்று அதற்கான வேலைகளை செய்து வருகிறது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

Ganguly

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் சிலரை அனுப்ப வேண்டுமென பிசிசிஐக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.இதில் இந்திய அணி 4 வீரர்களை ஆசியாவின் அணிக்காக ஆட அனுப்பும் என்று தெரியவந்து உள்ளது .

இதில் விராட் கோலி , ஷிகர் தவான், முகமது சமி,குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தொடரில் தோனி, ரோஹித் மற்றும் பாண்டியா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முக்கிய வீரர்களான இவர்கள் அந்த தொடரில் விளையாடமாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.

Dhoni-1

இது குறித்து பேசிய கங்குலி இந்திய வீரர்கள் அதில் ஆடுவார்கள் . ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எந்தெந்த வீரர்கள் என இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது கவலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement