இனிமேல் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் வாய்ப்பு தோனிக்கு கிடையாது. தோனிக்கு பதிலாக இவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – பி.சி.சி.ஐ

Dhoni-1
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Dhoni

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்திய அணியில் தோனி இடம்பெற மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை தொடரில் தோனியின் மெதுவான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் தோனி ஓய்வு பெறவேண்டும் என்றும் பலரும் அவரை வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் தோனி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தோனி குறித்து அவர் கூறியதாவது : இனி வரும் தொடர்களில் முதன்மை விக்கெட் கீப்பராக தோனி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்டார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இருப்பார்.

Pant

ஏனெனில் தற்போது இளம் வீரரானபண்டை அணியில் எடுத்து அவரின் திறனை மேம்படுத்த வேண்டும். எனவே 2020 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இனி பண்ட் இனிமேல் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்படுவார். தோனி அணியில் இருந்தாலும் பண்டிற்கு ஆலோசனைகளை வழங்குவது மட்டுமே செய்வார். மேலும், தோனி இந்த வருட இறுதி வரை மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது அதன் பின் வாய்ப்பு கிடைப்பது அரிது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement