15 ஆண்டுகள் ஆகியும் பழசை மறக்காமல் விசுவாசத்தை காட்டிய தல தோனி – விவரம் இதோ

Dhoni-1
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளார் .

dhoni

- Advertisement -

நேற்று தனது திருமண நாளை கொண்டாடிய தோனி குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தோனியின் பழையதை மறக்காமல் தனக்கு உதவியவர்களுக்கு விசுவாசத்தைக் காட்டும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

அது யாதெனில் தோனி தனது ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் ஸ்பான்சர்கள் யாரும் அவருக்கு முன் வரவில்லை. அப்போது முதன் முதலில் BAS என்ற நிறுவனம் தோனிக்கு ஸ்பான்சர் செய்தது. அவர்களுடைய உதவியுடன் 2004ஆம் ஆண்டு தோனி அறிமுகமாகும் போது அந்த விளையாட்டு உபகரணங்களை தோனி பயன்படுத்தினார். அதன் பிறகு தோனி பெரிய கிரிக்கெட் வீரர் ஆக மாறிய பின்னர் வெவ்வேறு ஸ்பான்சர்கள் உடன் ஒப்பந்தத்தில் இருந்து அவர்களுடைய உபகரணங்களை பயன்படுத்தி விளையாடினார்.

dhoni 2

இந்நிலையில் தற்போது ஓய்வு பெற இருக்கும் நிலையில் மீண்டும் BAS நிறுவன உபகரணங்களை பயன்படுத்துகிறார். அதுவும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் இல்லாமல் இலவசமாக அவர் அந்த உபகரணங்களை பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் பழையதை மறக்காமல் அவர்களுக்கு உதவும் தோனியின் இந்த குணம் தற்போது வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement