MS Dhoni : ஐ.பி.எல் தோல்வி குறித்து பேச எதுவுமில்லை. புதிய இலக்கினை டார்கெட் செய்துள்ள – தோனி

இந்தியாவில் 12 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி

Dhoni
- Advertisement -

இந்தியாவில் 12 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய தோனி :சென்னை அணியின் பேட்டிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை என்றும் மேலும் பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் தொடர் முழுவதும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்தது என்று கூறினார்.

பிறகு பேசிய தோனியின் உரையாடலில் ஒரு முக்கிய விடயம் தற்போது தெரியவந்துள்ளது. அது யாதெனில் தோல்வி குறித்து பேசிக் கொண்டிருந்த தோனி திடீரென்று ஐபிஎல் தோல்வி பற்றி நிறைய நினைத்துக் கொள்ள நேரமில்லை உலகக்கோப்பை அருகில் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த தோல்வியை பற்றி பெரிதாக பேசவிரும்பவில்லை இதை மறந்து விட்டு உலகக் கோப்பை தொடருக்கு தயாராக வேண்டும் என்று கூறினார்.

Dhoni

அவரின் பேச்சில் இருந்து இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் செய்துள்ள டார்கெட் நமக்கு தற்போது தெரியவந்துள்ளது. தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் தோனி இந்திய அணிக்காக இந்த தொடரை வெற்றியுடன் முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் எண்ணம் இந்தப் பேட்டியின் மூலம் தெளிவாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement