இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி மைதானத்துக்கு நேரடியாக வருவார் என்று மைதான நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். ஆனால் முதல் மூன்று நாள் போட்டியை காண வராத தோனி நேற்று கடைசி நாள் மைதானத்திற்கு வந்து இருந்தார்.
.@msdhoni marked his presence at JSCA in style as he took his new car 'Jonga' for a spin!????????#Dhoni #TeamIndia #Ranchi pic.twitter.com/HKNmT5KavZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 22, 2019
மேலும் தோனி இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று தோனி மைதானத்திற்கு வந்ததையும், வீரர்களை சந்தித்ததையும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்நிலையில் தற்போது நேற்று தோனி தனது மிலிட்டரி வகை காரான ஜோங்கா காரில் மைதானத்திற்கு வந்து மீண்டும் அதே காரில் வீட்டிற்கு திரும்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தோனி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த காரை ஓட்டிச்சென்ற தோனி பொது மக்கள் அதிகமாக திரளும் பொதுவான பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்பும்போது ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். உள்ளூர் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற தோனி அவர்களும் நின்று செல்பி எடுத்துக் கொண்டு மேலும் அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தும் தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.