- Advertisement -
உலக கிரிக்கெட்

2019 உலக கோப்பை விளையாடுவாரா, மாட்டாரா.! பதிலளித்த தோனி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி,கிரிக்கெட் தொடரில் 3 தரப்பு உலக கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர். தோனி குறித்து பல்வேறு விமர்சங்கள் வந்தாலும், அதனை என்றும் பொருட்படுத்தாமல் கூலாக இருந்து வருகிறார், அதனால் தான் இவரை கேப்டன் கூல் என்றும் அழைத்து வருகின்றனர்.

1983 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று விடாத என்று ரசிகர்கள் ஏங்கி வந்தனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 28 வருட தாகத்தை தணித்தார் தோனி. தற்போது 36 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவாரா என்பது தான் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய ஐயமாக இருந்து வருகிறது.

- Advertisement -

கடந்த சில காலமாக தோனியின் பேட்டிங் கடும் விமரசனத்திற்கு உள்ளது. அவருக்கு வயதி விட்டது என்றும் அவர் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற வேண்டும் என்றும் தோனியை விரும்பாத சிலர்கள் கூறிவந்தனர். ஆனால், சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பங்குபெற்று தோனி தனது திறமையை நிரூபித்து தனது ஹேட்டர்ஸ் முகத்தில் கறியை பூசினார். இந்நிலையில் தான் 2019 இல் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கு பெறுவீர்களாக என்ற கேள்விக்கு தோனி தற்போது பதிலைத்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தோனி, தனது ஒய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த போது “அனைவரும் நான் 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலக கோப்பையில் விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்புகின்றனர். நான் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையில் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் தோனியின் ரசிகர்கள் பெரும் மகிச்சியில் திளைத்துள்ளனர்.

- Advertisement -