அனைவரும் ஸ்டைலா டேட்டூ போட்டு இருக்கும்போது தோனி மட்டும் ஏன் டேட்டூ போடல தெரியுமா ? – காரணம் இதுதானாம்

Tatoo
- Advertisement -

உடம்பில் பல்வேறு இடங்களில் விதவிதமாக டேட்டூ போட்டுக்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் ஒரு டிரெண்ட் ஆகி வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஈர்ப்பு பொதுமக்கள் மத்தியில் மட்டும் இல்லாது இன்று பிரபலங்களும் டேட்டூ குத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த கலாச்சாரம் இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய அளவில் இருக்கிறது.

Tatoo 2

- Advertisement -

மேலும் இந்திய வீரர்கள் பலரும் தங்கள் உடம்பில் விதவிதமான வடிவமைக்கப்பட்ட டேட்டூக்களை வரைந்து கொள்கின்றனர். கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரர்களாக திகழும் விராட் கோலி, ராகுல், மணிஷ் பண்டே, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் சாஹல் என பல்வேறு வீரர்களும் தங்கள் உடம்பில் விதவிதமான டேட்டூக்களை குத்தி உள்ளனர்.

அதிலும் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடம்பில் 8 இடங்களில் குத்தியுள்ளார். மேலும் ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோரும் ஒரு கை முழுவதும் குத்தி உள்ளனர் இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி தன் உடம்பில் ஒரு டேட்டூ கூட ஏன் குத்தவில்லை என்பதற்கான காரணத்தை அவரே வெளியிட்டுள்ளார்.

Tatoo 1

அதன்படி தோனி பழைய பேட்டி ஒன்றில் கூறுகையில் : களத்தில் எவ்வளவு தைரியமாக இருப்பவருக்கும், உறுதியாக இருப்பவருக்கும் மைதானத்தை விட்டு வெளியே சிறிய ஊசியை கண்டால் பயம் அதே போல எனக்கும் டேட்டு போடும் ஊசியை என் உடம்பில் செலுத்தும் போது வலிக்கும் என்ற பயம் இருப்பதினால் நான் எனது உடம்பில் ஒரு டேட்டூ கூட குத்தவில்லை.

fitness

பயம் என்ற ஒரு காரணம் மட்டுமே நான் என் உடம்பில் ஒரு டேட்டூ கூட போடாததுக்கு காரணம் என்று டோனி கூறியுள்ளார். இதுவரை நான் அதற்கு முயற்சி செய்யாத வரை எனக்கு மகிழ்ச்சியே என்றும் தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement