சி.எஸ்.கே வீரரை மாலத்தீவுக்கு அழைத்து சென்று வாலிபால் விளையாடிய தோனி – வைரலாகும் வீடியோ

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

- Advertisement -

தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் : ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். தேர்வாளர்களுக்கும் தெரியும் என்று தோனியின் இடம் குறித்து சூசகமாக தனது கருத்தினை தெரிவித்தார்.

இந்நிலையில் தோனி தனது மகளின் ஐந்தாவது பிறந்த நாளுக்காக தனது நண்பர்களுடன் மாலத்தீவு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தோனி தனது சக அணி வீரரான ஆர்.பி.சிங் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பானிபூரி வழங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாவ்லா சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அது மட்டுமின்றி பீச்சில் வாலிபால் விளையாடும் வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. இதிலும் ஆர்.பி.சிங் மற்றும் சாவ்லா ஆகியோருடன் தோனி இணைந்து தங்களது நேரத்தை உற்சாகமாக கழித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement