கொரோனாவால் ராஞ்சி திரும்பிய தோனி. மீண்டும் மைதானத்தில் பயிற்சி – வைரலாகும் வீடியோ

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடருக்காக பல அணிகள் சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தங்கள் பயிற்சியை ஆரம்பித்தன. அதிலும் குறிப்பாக சென்னை அணி மார்ச் மாதம் 2 ஆம் தேதியே தங்களது பயிற்சியை ஆரம்பித்தது. ஆனால் கரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட்டன.

Dhoni

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது பயிற்சி களத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கடந்த ஒரு மாதமாக பயிற்சி செய்து வந்தனர் . அவர்களும் தற்போது தங்கள் ஊருக்கு திரும்பி விட்டனர். மேலும் சென்னை அணியின் பயிற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தோனி கிரிக்கெட் மட்டையை கீழே போட்டுவிட்டு பேட்மிட்டன் ராக்கெட்டை கையில் எடுத்துவிட்டார். ராஞ்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பேட்மிட்டன் ஆடுகளத்தில் தற்போது பேட்மிண்டன் ஆடிவருகிறார் தோனி. மேலும் எப்போதும் தனது ஓய்வு நாளை எதாவது விளையாட்டுடன் தொடரும் தோனி மீண்டும் பேட்மிண்டன் ஆடத்துவங்கி உள்ளார்.

மேலும் தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக்கில் ஜாலியாக ஊர் சுற்றுவதும் ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

- Advertisement -

ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிக்கான கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் துவங்குவதற்கான வாய்ப்பாக பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி ஐந்து தேதிகளும் அதற்காக ஒதுக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhoni-1

எது எப்படி இருப்பினும் தோனி குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. சென்னையில் இருந்து தோனி ராஞ்சி புறப்பட்டபோது கூட அவர் ரசிகர்களுக்கு கையெழுத்திட்ட வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement