ஓய்விற்கு பிறகு ராஞ்சியில் இதைத்தான் செய்ய போகிறாராம் தோனி – வெளியான புதுத்தகவல்

Dhoni-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. மேலும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்த்து வரும் வேளையில் அவர் இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

Dhoni

- Advertisement -

மேலும் தோனி ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய போகிறார் என்று அவ்வப்போது ஒரு தகவல் என புதுப்புது தகவல்கள் வெளியாகி வந்தன. இராணுவத்தில் ஈடுபடுவதாகவும் ஓவியத்தில் ஆர்வம் காட்டுவதாகவும் என்று பல தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது தோனி ஓய்வுக்குப் பிறகு இதைத்தான் செய்யப் போகிறார் என்ற ஒரு நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இளம் வீரர்களுக்கும் அம்மாநில இளைஞர்களின் பயனுக்காகவும் ஒரு கிரிக்கெட் அகாடமி நிறுவ உள்ளதாக தெரிகிறது. அதை அவரது சிறுவயது நண்பருடன் சேர்ந்து துவங்க உள்ளார் என்று நம்பகத்தரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

dhoni

தோனியின் கிரிக்கெட் அகாடமி மூலம் அம்மாநில கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தி அவர்களை முன்னேற்றும் பணியில் ஈடுபடவுள்ளார். எனவே அவர் ஓய்வுக்குப் பிறகு நிச்சயம் தனது கிரிக்கெட் அகாடமி தொடங்கி அதன் மூலம் இந்திய அணிக்கு புதிய வீரர்களை கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது.

Advertisement