தோனி அடுத்துவரும் பங்களாதேஷ் தொடரிலும் ஆடமாட்டார் – காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Dhoni

- Advertisement -

தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் தோனி தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது தோனி விளையாடுவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது வெளியான அறிக்கைப்படி தோனி தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அடுத்து வரும் பங்களாதேஷ் டி20 தொடரிலும் விளையாடமாட்டார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் கிடைக்காத வாய்ப்பு பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் கிடைக்காது என்று கருதப்படுகிறது.

Dhoni-1

மேலும் டோனிக்கு பதிலாக அந்த தொடரில் பண்ட் தேர்வாவார். அதன் பிறகு அடுத்த வருடம் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால் பண்ட்க்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் இதனால் இதனை கணித்து தனது ஓய்வை நீட்டிக்கவும் இந்திய அணியின் டி20 தொடரில் இருந்து வெளியேறும் தோனி பங்களாதேஷ் தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement