பிரபல இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் பயோபிக் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் தோனியின் தீவிர ரசிகர்கள் அனைவரும் இவரை தோனியின் மறு உருவமாகவே பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து இன்னும் உண்மை காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் பிரபலங்கள் பலரும் அவரின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, கம்பீர் மற்றும் சாஹல் என அனைவரும் சமூக வலைதளம் மூலமாக தங்களது இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தோனி பயோபிக் படத்தில் நடித்திருந்தாலும் அவரது மறைவு குறித்து தோனி எந்தவிதக் கருத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. இது குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி தோனியின் மேனேஜர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவு குறித்து பேசுகையில் : சுஷாந்தின் மறைவு குறித்து தோனியிடம் தகவலை கொண்டு சென்றோம். அப்போது அதனை கேள்விப்பட்ட தோனி மீளாத்துயரில் தற்போது வரை இருப்பதாகவும், மேலும் தோனி அவரது மறைவின் காரணமாக பேச வார்த்தை இல்லாமல் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதால் தான் தோனி மௌனம் காத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது இந்த தற்கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட தோனி இதுவரை அந்த வருத்தத்தில் இருந்து வெளிவராமல் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவேதான் தோனி இதுவரை அவரது மறைவு குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.