இந்திய அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு உலக அளவில் பல ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக அவர் மீது அளவிட முடியாத பாசத்தை கொண்ட ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அதனை போன்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தோனியின் மிகப்பெரிய ரசிகராக அவரையும், இந்திய அணியில் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். முகமது பஷீர் என்ற பெயர் கொண்ட அந்த பாகிஸ்தானிய ரசிகர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்.
இவருக்கு தோனி எப்போது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடந்தாலும் இலவசமாக டிக்கெட் வழங்குவார். இதுகுறித்து பஷீர் கூறியதாவது : நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் தோனியிடம் எனக்கு நேரடி தொடர்பும் உண்டு அவரை போனில் தொடர்பு கொண்டால் அவர் பிசியாக இருப்பார் என்பதால் மெசேஜ் மூலம் அவருடன் எப்போதும் தொடர்பில் இருப்பேன் இந்த முறை நான் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இங்கே பாகிஸ்தான் போட்டியை காண நினைத்தபோது எனக்கு சிலர் உதவ முன்வந்தனர்.
ஆனால் தோனி எனக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து விட்டார். மேலும் எட்டு ஆண்டுகளாக எனக்கு இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க டிக்கெட் எடுத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை எனக்கு செய்வார். அதனைப் போன்றே இந்த முறையும் எனக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார் என்று முகமது பஷீர் தோனி குறித்து கூறினார்.