ராணுவ பயிற்சியை முடித்து ராஞ்சி திரும்பினார் தோனி. அடுத்த திட்டம் இதுதான் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியினை விக்டர் படையுடன் சேர்ந்து மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் அன்று லே பகுதியில் உள்ள பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.

Dhoni

- Advertisement -

அதனை முடித்து அவர் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பள்ளி என அனைத்து இடங்களுக்கும் சென்று அவருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் தற்போது தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்த டோனி லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

இதற்கடுத்து தோனியின் திட்டம் யாதெனில் அடுத்து வரும தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்காக பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதம் கிரிக்கெட் தொடர்பு நஇருந்த தோனி மீண்டும் தனது பயிற்சி ஆரம்பித்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement