எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வந்த தோனி – புகைப்படம் இதோ

Dhoni-3
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த ராஞ்சி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்த போட்டி ஆரம்பம் ஆகும் போது ராஞ்சி மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் தோனி இந்த போட்டியை காண மைதானத்திற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல் மூன்று நாட்கள் போட்டியை காண வரவில்லை எனவே ரசிகர்கள் அதிர்ப்தி அடைந்தனர். இந்நிலையில் இன்றும் அவர் மைதானத்திற்கு வந்து இருக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் தோனி இன்று காலை மைதானத்திற்கு வந்திருந்தார். மேலும் இந்திய வீரர்களின் ஓய்வு அறையில் இருந்த தோனி உள்ளூர் வீரரான நதீமுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருந்ததை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.

போட்டி ஆரம்பமான சில நிமிடங்களில் நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை வெற்றியுடன் முடித்துக் கொடுத்தார். இந்நிலையில் தோனியின் இந்த வருகை குறித்த இந்த பதிவு தோனியின் ரசிகர்களால் அதிக அளவு வைரலாகி வருகிறது. மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தோனியின் இந்த சந்திப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement