ரெய்னா, யுவ்ராஜ் மாதிரி தோனியும் இந்த முடிவை கையில் எடுக்க வேண்டும் – ரசிகர்கள் வைத்த கோரிக்கை

Yuvraj
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அதன் பிறகு எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் இங்கு நடைபெறவில்லை. மேலும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றி நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எப்போது இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பிப்ரவரி மாதத்தில் விளையாடும் என பிசிசிஐ ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ளூர் வீரர்கள் பங்கேற்கும் சையது முஷ்டாக் அலி தொடர் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் என்று தகவல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது.

BCCI

- Advertisement -

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் என்றும் அதற்காக அனைத்து அணிகளும் அவர்களின் வீரர்களின் பட்டியலை தயார் செய்து பிசிசிஐ பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் மின்னஞ்சல் மூலமாக இந்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்றும் வீரர்கள் என அனைத்து விஷயங்களையும் உறுதிப்படுத்துமாறும் பிசிசிஐ கிரிக்கெட் சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பல்வேறு இந்திய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாட இருப்பது தற்போது இந்த தொடரின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஓய்வு பெற்ற இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா உத்தரப்பிரதேச அணிக்காக தலைமை தாங்கி இந்த தொடரில் பங்கேற்பார் என்ற உறுதியான தகவல்கள் வெளியானது. அதன் பிறகு கேரளா அணிக்காக சூதாட்ட பிரச்சனைகளிலிருந்து நீங்கிய ஸ்ரீசாந்த் கேரள அணிக்காக விளையாடுகிறார் என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது பஞ்சாப் அணி சார்பாக ஓய்வு பெற்ற இந்திய வீரரான யுவராஜ் சிங்கும் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Yuvraj 1

அது மட்டுமின்றி இந்திய அணியின் முன்னணி வீரரான அம்பத்தி ராயுடு ஆந்திரப்பிரதேச அணிக்காக விளையாட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி இந்திய நட்சத்திர வீரர்கள் இந்த தொடங்கி பங்கேற்பதால் இந்த தொடரின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது இணையத்தில் தோனியின் ரசிகர்கள் வித்தியாசமான ஒரு வேண்டுகோளை வைத்து உள்ளனர். அதாவது ஓய்வு பெற்ற ரெய்னா மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்று விளையாடி இருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் அதேபோன்று தோனியும் இந்த தொடரில் விளையாட வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரை போன்று இந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் தோனி பங்கேற்று தங்களது ரசிகர்களுக்காக விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Dhoni

இருப்பினும் அவர் உள்ளூர் தொடரிலும் பங்கேற்றால் அது அவரது பார்ம்முக்கு நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே தோனியின் பேட்டிங்கை விமர்சித்து வரும் பலர் அவர் நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடக் கூடாது என்றும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி டச் வைத்துக் கொண்டால் மட்டுமே ஐபிஎல் தொடரில் அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement