கவலை வேண்டாம். நான் இந்த தொடரில் தான் ஓய்வு பெறுவேன் – தோனி அறிவிப்பு

Dhoni Dhawan
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி பிறகு தோனியின் ஓய்வு பற்றிய பேச்சு முக்கியமாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து அவரது ஓய்வு குறித்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது.

Dhoni-2

- Advertisement -

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெற மாட்டார் என்று பிசிசிஐ கூறிவந்த நிலையில் தானே முன்வந்து தோனி இரண்டு மாத ஓய்வினை பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார். அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதனால் தோனி தற்போது 2 மாதம் இந்திய அணியில் இருந்து விலகி உள்ளது உறுதியாகியுள்ளது.

தோனியின் இந்த இரண்டு மாத திட்டம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை இந்த இரண்டு மாதங்கள் பாராமிலிட்டரி உடன் பணியாற்றவே இந்த தொடரில் விலகி உள்ளார். தோனியின் இந்த முடிவு குறித்து தேர்வு குழுவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் தெரிவிக்கப்படும்.

Dhoni

இந்நிலையில் தோனியின் ஃபேஸ்புக் பக்கத்தில் நான் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என்றும் இது ஓய்வுக்கான சரியான நேரம் இல்லை என்றும் மேலும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் நான் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவேன் தொடர்ந்து எனது ஆதரவு அளியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

dhoni 2

தோனியே எழுதியது போல இருக்கும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. ப்ளூடிக் உடன் வந்த பதிவு என்பதால் அது உண்மை என்று பலர் நம்பினர். ஆனால் தோனியின் ரசிகர்கள் போலியாக உருவாக்கப்பட்ட பதிவு என்றும் அது உண்மையானது அல்ல என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement