என்னதான் இருந்தாலும் தோனி இப்படி செய்திருக்கக் கூடாது. ஏமாற்றத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ

Dhoni-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் துவக்கத்தில் அகர்வால், புஜாரா மற்றும் கோலி என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

Rahane

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே மற்றும் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா நேற்று மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் முதல் நாள் ஆட்டத்தை முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி (117) சதம் அடித்தார். ரஹானே (83) ரன்களில் இருந்தார்.

தற்போது இரண்டாம்நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிவரும் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு ரன்களை குவித்துள்ளது. ரஹானே சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது 11 ஆவது சதத்தை பதிவுசெய்தார். இந்நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியைக்காண தோனி நேரில் வருவார் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் தோனியை காண மைதானம் வந்திருந்தனர்.

Dhoni-3

ஆனால் நேற்றைய போட்டியை காண குறிப்பிடப்படுத்தி தோனி மைதானத்துக்கு வரவில்லை. எனவே தோனியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இரண்டாம் நாளான இன்று மைதானம் பெருமளவு காலியாகவே காணப்படுகிறது. இன்றும் தோனி போட்டியை காண வருவாரா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் அவரின் வருகைக்காக மைதானத்தில் காத்திருக்கின்றனர்.

Advertisement