சேப்பாக்கத்தில் சிங்கம் மாதிரி நிக்க வேண்டியவரை இப்படி ஆக்கிடீங்களே – வைரலாகும் தோனியின் புகைப்படம்

Dhoni-1
- Advertisement -

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பின் முன்னெச்சரிக்கை காரணமாக இந்தியா மற்ற நாடுகளை விட முன்கூட்டியே தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தன்னுடைய ராஞ்சி வீட்டில் என்ன செய்து வருகிறார் என்பது குறித்து அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

Dhoni 1

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1400 தாண்டியுள்ளது 199 பேர் உயிரிழந்த நிலையில் 504 பேர் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 364 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டி நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு எதனையும் பிசிசிஐ இன்றுவரை அறிவிக்கவில்லை.

Dhoni

மேலும் இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பலாம் என்று நினைத்த மகேந்திர சிங் தோனியின் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு போட்டியிலும் தோனி இதுவரை விளையாடவில்லை. அடுத்ததாக அவர் எப்பொழுது விளையாடப் போகிறார் என்று ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரும் தற்போது அவருக்கு இல்லை என்பதால் தோனியின் நிலைகுறித்து வருத்தம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை நேரடியாக வீடியோ மூலம் பகிர்ந்து வருகின்றனர் .மேலும் தங்கள் வீட்டில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு களையும் அவர்கள் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

Dhoni

தற்போது அந்த வகையில் தோனி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக சாக்ஸி வெளியிட்ட புகைப்படத்தில் : தனது ராஞ்சி பண்ணை வீட்டில் தோட்டத்தில் இருக்கும் செடிகளை வெட்டி தோனி தோட்ட வேலை செய்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “சேப்பாக்கத்தில் சிங்கம் மாதிரி நிற்கவேண்டிய மனுசன தோட்ட வேலை செய்ய வச்சிட்டீங்களே” என்று கொரோனாவை திட்டித் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement