தன் வாழ்க்கையை மாற்றிய பெண்ணிற்காக கண் கலங்கிய தோனி ..!

dhoni
dhoni
- Advertisement -

கடந்த சில ஆண்டு காலமாக தோனி தனது செயல்திறனில் ஆட்டம் கண்டு வந்தார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி சென்னை அணியை தலைமை ஏற்று கோப்பையை பெற்று தந்து, தான் இன்னும் ஒரு வெற்றிகரமான கேப்டன் தான் என்று நிரூபித்தார் தோனி.

dhoni

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் மகளான ஜிவா வின் விடியோக்கள் பல வெளியாகின. அத்துடன் ஐபிஎல் போட்டியின் போதும் தனது ஒய்வு நேரத்தை தனது மகள் ஜிவாவுடனே களைத்து வந்தார் தோனி. சமீபத்தில் தோனி அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் தான் முக்கியம் என்று நினைத்திருந்த என்னை எனது மகள் தான் மனிதனாக மாற்றினார்’ என்று குறியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவரது மகள் ஜிவா சென்னை அணி விளையாடிய பெரும்பாலான போட்டிகளை நேரில் கண்டு, சென்னை அணியை உற்சாகப்படுத்தி வந்தனர். ஆனால், தோனியின் மகள் வந்ததற்கு காரணம் என்னமோ அவரது தந்தை தோனி தான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றி மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த பொது கூட தோனி தனது மகளுடன் தான் இருந்தார்.

jeevadhoni

சமீபத்தில் தனது மகள் ஜிவா குறித்து பேசிய தோனி ‘ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் கிரிக்கெட்டை தான் வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து கொண்டிருதேன். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன். ஐபிஎல் தொடர் முழுவதும் என் மகள் என்னுடன் தான் இருந்தால்.

என் மகளுடன் புல்தரையில் விளையாட மைதான பராமரிப்பாளர்களிடம் அனுமதி பெற்றேன். அவள் மற்ற வீரர்களின் பிள்ளைகளுடன் ஒன்றாக விளையாடுவதை பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. இந்த தொடரை நான் வெல்ல முக்கிய காரணம் என் மகள் தான், அவள் தான் என்னை ஒரு மனிதனாக மாற்றினால் ‘ என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement