இன்று 5 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸிவா தோனி. இளவரசி போல அலங்காரம் செய்து – தோனி வெளியிட்ட புகைப்படம்

Ziva
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த 6 மாதங்களாக இந்திய அணியில் விளையாட வில்லை. மேலும் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என்று அனைவரும் கூறிவரும் நிலையில் தோனி ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே. மேலும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக தோனி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தங்களது நண்பர்களுடன் மாலத்தீவு சென்றிருக்கும் தோனி அங்கிருந்தபடி வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட் அடித்தன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தனது மகளை இளவரசி கிரீடம் வைத்து சிரித்தபடி நியூ லுக்கில் இருக்கும் தோனி அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் பகிரப்பட்ட சில மணிநேரத்திலேயே லைக்ஸ்களை குவித்து வருகின்றது. மேலும் தோனிக்கு எவ்வளவு ரசிகர் இருக்கிறார்களோ அதே அளவிற்கு அவரது மகளுக்கும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கும் அவரது மனைவி சாக்ஷிக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஸிவா தோனி பிறந்தது குறிப்பிடத்தக்கது. ஸிவா பிறக்கும்போது தோனி உலகக் கோப்பையில் ஆடி இருந்ததால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தே அவரது மகளை நேரில் வந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement