ராணுவத்தை தொடர்ந்து புதிய நிறுவனத்தில் தனது பணத்தை முதலீடு செய்ய உள்ள தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாளை சுதந்திரத்துடன் தோனியின் ராணுவ பயிற்சி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அவர் தற்போது வேறு ஒரு திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

dhoni

- Advertisement -

அதன்படி மகேந்திர சிங் தோனி கார் வாங்கும் மற்றும் விற்கும் நிறுவனமான கார் 24 என்ற நிறுவனத்தில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கார் 24 நிறுவனத்தில் தோனி ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், அந்த நிறுவனத்தை பெரிதுபடுத்தும் தூதராகவும் பொறுப்பேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கார் 24 நிறுவனம் காரை எளிதாக வாங்க மற்றும் விற்க ஆகிய பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் 35 நகரங்களில் 155 கிளைகளுக்கு மேல் உள்ளது. மேலும் 300 இடங்களில் இந்த நிறுவனத்தை விரிவாக்க முடிவு செய்தன.ர் அதன்படி இந்த நிறுவத்தில் தோனி ஒப்பந்த அடிப்படை பங்குதாரராகவும், அதன் தூதராகவும் பொறுப்பேற்க உள்ளார் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் விக்ரம் சோப்ரா தெரிவித்துள்ளார்.

cars 24

ஓய்வுக்குப் பிறகு இந்த நிறுவனத்துடன் தோனி தொடர உள்ளதாகவும், அவரது பணத்தினை இந்த நிறுவனத்தில் பங்குதாரராக முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார் பிரியரான தோனி இந்த நிறுவனத்துடன் இணைய உள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement