ஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்

- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Ind

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர சில உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மூலம் இந்த தொடருக்கான தேர்வு நேற்று நடந்தது.

இந்தத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஒருநாள் அணிக்கான வீரர்களின் விவரம் மற்றும் டி20 தொடருக்கான வீரர்களின் விவரம் வெளியாகியது. அதன்படி கேப்டனாக மீண்டும் விராட்கோலி தொடர்கிறார். ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தொடர்கிறார்.

dhoni

அதன்படி நேற்று வெளியான இந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒரு புறம் தோனி ரசிகர்கள் மீண்டும் விளையாட வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்த தொடரிலும் வழக்கம்போல வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனை நினைத்து அவர்கள் தற்போது கவலைப்படுகின்றனர். இந்நிலையில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இளம் வீரர் மேலும் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

Samson

ஆனால் அவருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரியாக விளையாடாத ரிஷப் பண்ட்க்கு பதிலாக இவரை சேர்க்கலாம் என்று அனைவரும் நினைத்தனர் ஆனால் இவருக்கான இடம் கிடைக்காததால் ஒரு பக்கம் தோனியின் நிராகரிப்பு குறித்தும், ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் இடமும் கிடைக்காததால் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement