Shikhar Dhawan : காயமடைந்தாலும் தொடர்ந்து தவான் இங்கிலாந்தில் இருப்பார் – பி.சி.சி.ஐ

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Dhawan
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Dhawan

- Advertisement -

இந்த போட்டியில் காயம் காரணமாக தவான் அணியில் இடம் பிடிக்க மாட்டார். அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. மேலும் தவானுக்கு பதிலாக மாற்று வீரராக ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்ல உள்ளார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் தவான் இன்னும் உலகக்கோப்பை தொடர் முடியும் வரை இங்கிலாந்திலேயே இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன் காரணம் யாதெனில் தவான் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தினமும் கண்காணிக்கப்படும் எனவே அவர் காயம் குறித்த அறிக்கை நாளுக்கு நாள் தெரியவரும் விரைவில் தவான் குணமடைந்தால் அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

dhawan 1

இந்திய அணியின் மருத்துவக்குழு தொடர் கண்காணிப்பில் தவானின் உடல் நிலை இருப்பதால் தவான் அணியுடன் தொடர்ந்து இங்கிலாந்தில் தங்க இருப்பதாகவும், பண்ட் ஒரு பாதுகாப்பிற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement