தோனி இன்னைக்கும் மிகப்பெரிய கேப்டனாக இருப்பதற்கு இதுவே காரணம் – தவான் பேட்டி

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. அவரைப் பற்றி முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் என அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி இது குறித்தெல்லாம் கவலை படாமல் தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஓய்வு அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் பயிற்சியை மேற்கொண்டு வரும் தோனி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhoni

- Advertisement -

மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 தொடரில் அவர் பங்கேற்பார் என்று செய்திகள் வெளிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனியின் தலைமையில் தான் நான் இந்திய அணிக்கு அறிமுகமானேன். அவர் மிகச்சிறந்த கேப்டனாக இன்றுவரை உலகஅளவில் திகழ்கிறார்.

ஏனெனில் ஒரு போட்டியை அவர் அணுகும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அணியின் சூழ் நிலை எவ்வாறு உள்ளது போட்டி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அனைத்தையும் அவர் சரியாக கணித்து வெற்றிக்கு என்ன தேவையோ அதனை செய்ய சொல்வார். மேலும் அவர் இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுத்தந்தது முக்கிய காரணமே அவருடைய கேப்டன்சி என்றே நான் சொல்வேன்.

Dhoni

அதேபோன்று அவர் இவ்வளவு பெரிய கேப்டனாக உருவெடுக்க காரணம் யாதெனில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களின் பலம் பலவீனம் அவருக்கு தெரியும். மேலும் அனைவரது திறன்களையும் கணித்து வீரர்களுக்கு என்னென்ன முடியும் எதிரணி வீரர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை கணித்து ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமையே அவர் இவ்வளவு புகழ்பெற்று மிகப்பெரிய கேப்டனாக இந்திய அணியில் வலம்வர காரணம் என்று நான் கூறுவேன் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement