தமிழக வீரரான இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது – தவான் பாராட்டு

- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Kohli 1

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோன்று தென்ஆப்பிரிக்க அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் இந்திய அணி இளம் வீரர்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : தற்போது உள்ள டி20 அணியின் இளம் வீரர்கள் பலர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் அடுத்தாண்டு உலக கோப்பை நடைபெற உள்ளதால் இந்த தொடர் அவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமையும்.

Sundar

தமிழக வீரர் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் அருமையாக பந்து வீசுகிறார் மேலும் அவர் எதிரணி வீரர்களை ரன் குவிக்க முடியாமல் அவரால் கட்டுப்படுத்த முடிகிறது எனவே அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் தீபக் சாகர் இருபுறமும் ஸ்விங் செய்து அருமையாக பந்து வீசுகிறார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி இளம் வீரர்கள் செயல்பாடு இந்த தொடரில் சிறப்பாக இருக்கிறது.

Advertisement