ப்ரித்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் இங்கிலாந்து போகலனா. இவருக்கு தான் அதிக வாய்ப்பு – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்களான வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கை தொடர் முடிந்து இங்கிலாந்து தொடரில் இணைவார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி ப்ரித்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் போது கொரோனா பாதிப்பில் சிக்கிய க்ருனால் பாண்டியாவுடன் சேர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் தற்போது இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

sky

மேலும் அவர்களுக்கும் கொரனோ உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் நிச்சயம் இங்கிலாந்து செல்ல மாட்டார்கள் என்று தெரிகிறது. அப்படி ஒருவேளை அவர்கள் இருவரும் இங்கிலாந்து செல்லவில்லை என்றால் அடுத்ததாக இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு தற்போதைய கேப்டனான அனுபவம் வாய்ந்த தவானுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhawan

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக அனுபவமுள்ள தவான் பார்ம் அவுட் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து செல்ல முடியாத பட்சத்தில் நிச்சயம் தவான் இங்கிலாந்து செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement