இலங்கை அணிக்கெதிரான தொடரில் இவரே இந்திய அணியின் கேப்டனாக இருக்கனும் – தீபக் சாகர் கருத்து

Chahar-1
- Advertisement -

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடுவதற்காகவும் ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரானது மூன்றரை மாதங்கள் வரை நடைபெறவிருக்கும் பெரிய தொடராகும். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இதே வேளையில் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் பங்கேற்று விளையாடும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியால் நிச்சயம் இலங்கை திரும்ப முடியாது என்பதனால் மற்றொரு இளம் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இலங்கை தொடரில் எந்தெந்த வீரர்கள் தேர்வு ஆவார்கள் ? யார் கேப்டனாக இருப்பார்கள் ? யார் பயிற்சியாளராக இருப்பார்கள் ? என்று பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டிய வீரர் குறித்து தனது கருத்தினை அறிவித்துள்ளார்.

Chahar-3

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஷிகர் தவான் தான் கேப்டனுக்கான நல்ல தேர்வாக இருப்பார். ஏனெனில் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் அவர். எனவே அணிக்குள் சீனியர் வீரரான அவருக்கு மற்ற வீரர்களிடமிருந்து நல்ல புரிதல் இருக்கும். இதன் காரணமாக நிச்சயம் தவான் கேப்டனாக இருந்தால் அது ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என தீபக் சாகர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்காக தயாராகி வருகிறேன். ஐபிஎல் தொடரின் போது சிறப்பாக பந்துவீசி உள்ளதால் அதனை நிச்சயம் இந்த தொடரிலும் தொடருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement