மீண்டும் இந்திய அணியில் மற்றுமொரு நட்சத்திர வீரர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Chahar-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

rahul 3

- Advertisement -

அதற்கடுத்து விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவிக்க அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்களில் ஆட்டமிழக்க 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் 22 ஆம் தேதி கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chahar-3

Saini-1

ஏற்கனவே இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் தவான் என முன்னணி வீரர்கள் காயம் காரணமாக வெளியேற தற்போது மற்றும் ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக கடைசி போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி அணியில் இணைந்துள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement